Advertisement

Share On
District News

விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: வித லீடர் அண்ணாமலை வலியுறுத்தல்

Admin 1 month ago தூத்துக்குடி
தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக உறுதியளித்தது
சென்னை, ஜூன் 19:

தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வித லீடர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக உறுதியளித்தது. அந்த வாக்குறுதியை நம்பியே விவசாயிகள் அரசுக்கு ஆதரவு அளித்தனர்.

ஆனால், தற்போது ரூ.75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களைத் தாங்களே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 1970-ஆம் ஆண்டு இதே நாளில், விவசாயத்துக்கு வழங்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று விவசாயிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அந்த துயர சம்பவம் நடைபெற்ற நாளிலேயே, 56 ஆண்டுகள் கடந்த பின்னரும், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களையே வருத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவது எந்த அரசின் அடிப்படை கடமையாகும். கடந்த ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மாற்றத்தை எதிர்பார்த்த மக்கள் தற்போதைய அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் பெயரில் மட்டுமே மாற்றம் இருந்து, நடைமுறையில் மாற்றம் இல்லாத நிலை காணப்படுவது வருத்தமளிக்கிறது.

எனவே, தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளை வேதனைப்படுத்தும் சூழலைத் தவிர்த்து, அவர்களின் நலனை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

போராட்டத்திற்கு தள்ளினால் தூத்துக்குடி தாங்காது" உப்பளத் தொழிலை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை

23 hours ago

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பிறந்தநாள்: தூத்துக்குடியில் சிவன், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு; பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்

2 weeks ago

மாணவர்களுக்கு சமமான, தரமான கல்வி கிடைக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் போட்டி நடத்த முடிவு

1 month ago

7 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: 4 மணி நேரத்தில் உறவுமுறைச் சான்று வழங்கிய வட்டாட்சியருக்கு பாராட்டு

1 month ago

மகனை மண்வெட்டியால் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றம் –II தீர்ப்பு

6 months ago

அ ம மு க மற்றும் மாற்று கட்சியில் இருந்து விலகி 300 மேற்பட்டோர் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

6 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்